Translate

Monday, November 26, 2012

இந்த உலகு அழியாது !!!!

நாம் அறிந்தபடி 21/12/2012 (மாயன் காலச்சுற்று நாட்காட்டி) ஒரு காலச்சுற்றின் (உகம்/யுகம்/age) முடிவேயன்றி அழிவல்ல. சித்தர்கள் கணிப்பின்படி கருமச்சித்தர் காலம் முடிந்து ஞானச்சித்தர் காலம் தொடங்குகின்றது. இது ஏலவே தொடங்கிவிட்டது. இதையே கலியுகம் முடிந்து சத்யயுகம் பிறக்கின்றது என்று பாரததேச ஞானிகளும் வகுத்துத் தந்துள்ளனர். நாலு உகங்களிலும் மிக மோசமான கலியில் இருந்து நாலிலும் மிக உன்னதமான சத்ய உகம் பிறக்கும் போது உலகலிலுள்ள கசடுகள் நீங்க சில அழிவுகள் நடக்கவே செய்யும். ஆனால், இந்த உலகு அழியாது. நாமறிந்தபடி 2037 வரை மாற்றங்கள் இடம்பெறும். நன்றி.

feedback
#காலச்சுற்று 

ஒரு காலச்சுற்று /உகம்/யுகம்/age பல் ஆயிரம் வருடங்களைக் கொண்டது. ஒரே இரவில் உகமாற்றம் நடைபெறுவதில்லை. ~1000miles/hr(just over 1000miles ~1070m/hr) வேகத்தில் சுற்றும் புவி சுற்றுவதை நாம் எப்படி உணர்வதில்லையோ அவ்வாறே காலச்சுற்று மாற்றத்தையும் மனித உணர்வுகளால்/ அறிவால் உணர்வது கடினம். ஒரு காலச்சுற்று மாற்றம் ஐந்து மானிட சந்ததிகளில் நடைபெறுகின்றது. நன்றி.

The World will not end but some natural calamity will happen in order to purify the mother Earth. Have no fear. Be compassionate towards all living beings. Thanks to





Wednesday, November 21, 2012

வாழைப்பூ

வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்!

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர்.

பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்ப
ூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர். வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன.

முன்னோர்கள் பொதுவாக வாழையை பெண் தெய்வமாகவே வணங்கி வந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம்.

மருத்துவப் பயன்கள்:

இரத்தத்தைச் சுத்தப்படுத்த:

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு:

இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

வயிற்றுப்புண் நீங்க:

இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.

மூலநோயாளிகளுக்கு:

மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

பெண்களுக்கு:

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.

வாழைப்பூ கஷாயம்

வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன்

இஞ்சி 5 கிராம்

பூண்டு பல் 5

நல்ல மிளகு 1 ஸ்பூன்

சீரகம் 1 ஸ்பூன்

சோம்பு 1 ஸ்பூன்

கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்

கறிவேப்பிலை 5 இணுக்கு

எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.

பெண்களுக்கு உண்டாகும் சூடு மற்றும் வெள்ளை படுதலை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும் குணமுண்டு. மலட்டுத் தன்மையைப் போக்கும். ஈறு வீக்கம், புண் இவற்றிற்கு சிறந்த மருந்தாகும். வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும்.

கை, கால்களில் உண்டாகும் பித்த எரிச்சலைக் குணப்படுத்தும். உடல் எரிச்சலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும். பருவ வயதினருக்கு உண்டாகும் சொப்ன ஸ்கலிதத்தை மாற்றும்.

நரம்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைத் தணித்து மூளைக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

இத்தகைய சிறப்பு மிகுந்த வாழைப்பூவை நாமும் சமைத்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.

Sunday, November 18, 2012

ஒரு தகவல்

நேற்றுதான் ஒரு தகவல் படித்தேன்.
இந்தியாவில் மரங்கள் இருந்த நிலப்பரப்பு 33 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைந்துவிட்டதாம். இதனால் மழையின் அளவும் பாதியாகக் குறைந்து ஏதோ வருகிற மழையும் பருவம் தவறிய காலங்களில் மழை வந்து வியசாயத்துக்கு கேடுதான் விளைவிக்கிறதாம்.இதனை சரி நிவர்த்தி செய்ய 55 கோடி மரங்கள் புதிதாக நடவேண்டுமாம்.

ஒரு விதை முளைத்து மரமாக சராசரியாக நான்கு ஆண்டுகள் ஆகும். இவ்வளவு மரக்கன்றுகளை யார் நடுவது,,?? வளர்ப்பது?? பாதுகாப்பது?. அதற்குள் இன்னும் எத்தனை மரங்கள் அழிந்து, அழிக்கப்பட்டுவிடுமோ?....

போதாக்குறைக்கு தொழிலகங்கள், வாகனங்கள் மற்றும் இதர மாசுபடுத்தும் மூலங்களைச் சரிகட்ட இன்னும் ஏராளமான மரங்கள் உருவாக்கப்பட்டால்தான் வருங்காலத்தில் இந்தியாவில் விவசாயம் என்று ஒன்று இருக்கும்.
இல்லாவிட்டால் உணவுத்தேவைக்காக வெளிநாடுகளில் கையேந்தவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம்.
அப்படியே நாம் கேட்டாலும் தருவதற்கு மற்ற விவசாய நாடுகளிலும் நிலைமை ஒன்றும் பிரமாதமாக இல்லை, நம் நிலையை ஒட்டியே உள்ளது.
ம்ம்ம்ம்..
வேதனையே மிஞ்சுகிறது...

கரீம் கனி


thankz 2 
சமூக வலைதள வசவுகள் facebook.

தமிழா வா என்னோடு

சமீபத்தில் சென்னை அரசு பள்ளியில் நடந்த சம்பவம் என் மனதை வதைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

எனக்குத் தெரிந்த ஆசிரியை ஒருவர் ஒன்பதாம் வகுப்புக்குப் பாடம் எடுக்கிறார். அவரது வகுப்பில் படிக்கும் மாணவியின் தாய் அவரிடம் வந்து " மேடம்.. நேத்து எம்பொண்ணு ரோட்ல வாந்தி எடுத்து மயக்கம் போட்டு விழுந்திருக்கா. கூட போன பொண்ணக் கூப்பிட்டு விசாரிங்க. அவதான் ஏதாச்சும் வாங்கி குடுத்துருக்கணும்." என்று அந்தத் தாய் கூற
, ஆசிரியை உடனே சம்பந்தப்பட்ட மாணவியை அழைத்து விசாரித்ததில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக வந்து விழுந்திருக்கிறது. இரண்டு மாணவிகளும் மது அருந்தியிருக்கின்றனர்!

இது பல நாட்களாக நடந்து வந்திருக்கிறது.எட்டாவது படிக்கும் மாணவர்களிடம் பணத்தைக் கொடுத்து அரசு மதுபானக்கடையில் மது வாங்கி, அருந்தி இருக்கின்றனர். மதுபானத்தில் அந்த சிறுவர்களுக்கும் பங்கு வேறு! இருவரையும் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்று விசாரித்ததில் இந்த திடுக்கிடும் தகவல் தெரிய வரவே, அந்த வகுப்பில் உள்ள அனைத்து மாணவிகளின் பைகளை சோதனை செய்துள்ளனர்.அவர்களின் பைகளில் என்ன இருந்தது தெரியுமா?

பான்பராக், சிம் கார்டு, கைப்பேசி, ஹான்ஸ் போன்றவை. தினமும் ஒரு மாணவி வீட்டிற்குத் தெரியாமல்


கைப்பேசியை எடுத்துவர, சிம் கார்டுகளை மாற்றித் தங்கள் ஆண் நண்பர்களிடம் பேசுகின்றனராம்.

நீங்க இவர்களை கண்டிக்க மாட்டீர்களா டீச்சர் என்று நான் கேட்டதற்கு, "இதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும். நானே இந்தப் புள்ளைங்களை ராத்திரி கடைத்தெருவுல யூனிபாம்லயே பாத்திருக்கேன். பெத்தவங்களுக்கே அவங்க பசங்க மேல அக்கறை இல்ல. நமக்கு ஏன் வம்பு? ஏதாச்சும் கேட்டா கைய கிழிச்சிகிட்டு பழிய எங்க மேல போடுதுங்க. அதனால தான் அந்த பொண்ணோட அம்மா புகார் பண்ணதும் நான் தலைமை ஆசிரியர்கிட்ட போய்விட்டுட்டேன். அவுங்க ஏதாச்சும் பண்ணிக்கிறாங்க.." என்று சொன்னார் அந்த ஆசிரியை.

அந்த மாணவிகள் தினமும் இரவு ஏழு,எட்டு மணிக்குத்தான் வீட்டிற்குச் செல்கின்றனர்.ஏன் இவ்வளவு லேட் என்று பெற்றோர்களும் கேட்பதில்லை; எதாவது கண்டித்தாலோ, அடித்தாலோ பழியை நம் மீது போட்டு விடுகின்றனர் என்றுக் கூறி ஆசிரியர்களும் ஏதும் கேட்பதில்லை.

ஒரு சில மாணவிகள்தான் இப்படி என்று நாம் அலட்சியமாக விட்டால், இந்த எண்ணிக்கை கண்டிப்பாக அதிகரிக்கத்தானே செய்யும்? '18 வயதுக்குட்பட்ட மாணவர்களே மது அருந்துதல் தவறு' என்று நாம் கூறிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இவர்கள் பதினைந்தே வயது நிரம்பிய மாணவிகள்.. என்ன செய்யப் போகிறோம்?

இதற்குக் காரணம் அவர்கள் வளர்ந்த சூழ்நிலையாகக் கூட இருக்கலாம்.அந்த வீட்டின் பெற்றோர் இருவரும் கூலி வேலை செய்பவர்களாக இருக்கலாம். இருவரும் தங்களது பிள்ளை எப்போது வருகிறது என்று தெரியாமல் அவளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டு அவளது படிப்பிற்காக தினமும் கடுமையாக உழைப்பார்கள்.

அரசுதான், யார் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று தெருவுக்குத் தெரு மதுபானக்கடையை திறந்து வைத்திருக்கிறதென்றால், இப்படி ஆசிரியர்களும் அலட்சியமாக இருந்துவிட்டால் நாளைய தமிழ்நாட்டின் கதிதான் என்ன?

பிள்ளைகளின் ஒழுக்கம் குறித்து கவனக்குறைவான பெற்றோர்களாக இருந்தாலும், ஆசிரியர்களின் அன்பால் எத்தனையோ மாணவர்கள் திருந்தி அவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்களே.. ஆசிரியர்கள் இப்படி தங்களின் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது சரியா?

மாணவிகளே குடிக்கக் கூடிய இந்த சூழலை உருவாக்கியது யார் குற்றம்? இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் என்கிறோம்.. அவர்கள் கையில் என்ன இருக்க வேண்டும் ? புத்தகமா புட்டியா? நீங்களே சொல்லுங்கள்.!

நன்றி : -இ. ராஜவிபீஷீகா ((தமிழா வா என்னோடு))


thankz 2 
Jayant Prabhakar facebook